பியகம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திடீரென உயிரிழந்துள்ளார்.
பேலியகொடவில் இன்று (29) பகல் நடந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மீண்டும் பொலிஸ் நிலையம் திரும்பியபோது அவர் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
பேலியகொட பிரதேசம் கொரோனா கொத்தணியாக மாறியுள்ளதால் உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் மாதிரி பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை